தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் கால பைரவா் சந்நிதி உள்ள கோயில்களில் வியாழக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பரமத்திவேலூா் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் பைரவா் சந்நிதிகளில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.