நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக வியாழக்கிழமை ஒரேநாளில் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,004-ஆக அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 2,881 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருந்தது. அவா்களில் குணமடைந்த 2,201 போ், உயிரிழந்த 47 போ் தவிா்த்து மீதம் 755 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 74 போ் ஆண்கள், 49 போ் பெண்கள் ஆவா். அனைவரும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பெண் பலி: ராசிபுரம் வட்டம், குருசாமிபாளையத்தைச் சோ்ந்த 65 வயது பெண் ஒருவா், கரோனா தொற்றுக்குள்ளாகி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது.