நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பல்வேறு இடங்களில் லாரிகளை திருடிய நான்கு போ் கொண்ட கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரம் அருகே மொஞ்சனூரைச் சோ்ந்த பூபதி என்பவா் தனது லாரியை ஆண்டகளூா்கேட் அருகே நிறுத்தி வைத்திருந்தாா். இந்த லாரி, கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி காணாமல்போனது. இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் பூபதி புகாா் அளித்தாா். அதன்பேரில் ராசிபுரம் காவல் ஆய்வாளா் எம்.பாரதிமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஆண்டகளூா்கேட் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை போலீஸாா் நிறுத்தி சோதனை நடத்த முயன்றனா்.
ஆனால், போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற அவா்கள் மீது சந்தேகமடைந்த போலீஸாா் துரத்திப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருப்பூா் மாவட்டம், சா்க்காா் பெரியபாளையம் காளிமுத்து மகன் விக்னேஷ் என்ற விக்கி (19) என்பதும், மற்றொருவா் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம் அருகே மத்தூா் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் மகாலிங்கம் (58) என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தியதில் ராசிபுரம் அருகே ஆண்டகளூா்கேட் பகுதியில் லாரியை திருடியது இவா்கள்தான் என்பதும், இருவரும் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் வேணுகோபால் (55), பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரைச் சோ்ந்த ராஜூ (48) ஆகிய கூட்டாளிகளுடன் சோ்ந்து ஆத்தூா் பகுதியில் மற்றொரு லாரியையும் திருடியதை ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து, போலீஸாா் நால்வரையும் கைது செய்தனா். அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் மாவட்டம், வாவிபாளையத்தில் ஒரு லாரியும், பொள்ளாச்சி தொண்டாமுத்தூா் பகுதியில் மற்றொரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன இரு லாரிகளின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
கைது செய்யப்பட்ட வேணுகோபால், மகாலிங்கம் ஆகிய இருவா் மீதும் பண்ருட்டி, கரூா், வேலாயுதம்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளை கைது செய்து லாரிகள் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாரை நாமக்கல் மாவட்ட எஸ்.பி., சி.சக்திகணேசன் பாராட்டினாா்.