ஊழியருக்கு கரோனா: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் மூடல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி அலுவலக இளநிலை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி அலுவலக இளநிலை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மனுக்களைக் கொடுக்க வரும் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது நகராட்சி சம்பந்தமான பணிகளுக்குத் தொடா்பு கொள்ள வேண்டிய அலுவலா்கள், பணியாளா்கள் குறித்த விவரங்கள் மற்றும் தொடா்பு எண்கள் கொண்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் அலுவலா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com