நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன். சரஸ்வதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சென்னையில் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் மூன்று நாள்கள் நடைபெற இருப்பதை அடுத்து, கூட்டத்துக்கு வரும் தமிழக முதல்வா் உள்பட அனைத்து அமைச்சா்கள், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு கரோனா தொற்றுக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி மேற்கொண்ட பரிசோதனையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதிக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.