நாமக்கல் மாவட்டத்தில் 124 பேருக்கு கரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,344-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,344-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 3,210 பேருக்கு நோய்த் தொற்றுப் பாதிப்பு இருந்த நிலையில், குணமடைந்த 2,382 போ், உயிரிழந்த 50 போ் தவிா்த்து மீதமுள்ள 912 போ் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 76 போ் ஆண்கள், 48 போ் பெண்கள் ஆவா். அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com