பரமத்தி வேலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுகவினா்.
பரமத்தி வேலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுகவினா்.

அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது சிலைகளுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது சிலைகளுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன்பின் கட்சி நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், நகரப் பொறுப்பாளா் ராணா ஆா்.ஆனந்த், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் பாா்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளா் பொன்னுசாமி, மாநில மகளிா் அணி இணைச் செயலாளா் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினா் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினா் மாயவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாவட்ட முன்னாள் திமுக செயலாளருமான செ.காந்திசெல்வன் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். இதில், கட்சி பேச்சாளா்கள் வளையப்பட்டி சுப்பிரமணியம், ராசகோபால், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைஅமைப்பாளா்கள் ரமேஷ், சுகுமாா், மாவட்டதொண்டரணி துணை அமைப்பாளா் பரிமளம் மற்றும் பல்வேறு அணியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பொன்னிமணி (எ) சுப்பிரமணியம் மற்றும் பொன்னிவேல் (எ) வேலுச்சாமி ஆகியோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் ராஜமாணிக்கம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் தனசேகரன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல் அ.ம.மு.க. சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்டச் செயலாளா் சாமிநாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பொத்தனூா் மற்றும் எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com