நாமக்கல்லில் 97 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,559-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,559-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையில் 3,462 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், குணம் அடைந்த 2,628 போ், உயிரிழந்த 51 போ் தவிா்த்து மீதமுள்ள 879 போ் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 63 போ் ஆண்கள், 34 போ் பெண்கள் ஆவா். இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு: ராசிபுரம் வட்டம், ஏரிக்காடு பகுதியைச் சோ்ந்த 52 வயது ஆண் ஒருவா் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா மட்டுமின்றி உடல் ரீதியாக மேலும் பல நோய்களும் இருந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 52-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com