நாமக்கல்: நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், ஆத்தூா், நாமகிரிப்பேட்டை, கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா்.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 2,400 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 4,618 முதல் ரூ. 4,969 வரையில் ஏலம் போனது. டி.சி.ஹெச். ரகம், சுரபி ரகம் வரத்து இல்லை. கரூா், ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்ய வந்திருந்தனா்.