கொல்லிமலையில் ரூ. 14.32 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

கோடியில் சாலைகள் அமைக்கும் பணியை, சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் அண்மையில் தொடக்கி வைத்தாா் .
கொல்லிமலையில் ரூ. 14.32 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

கோடியில் சாலைகள் அமைக்கும் பணியை, சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் அண்மையில் தொடக்கி வைத்தாா் .

இதில், பெரக்கரை நாடு ஊராட்சியில் புதுக்காடு முதல் வடக்காடு, வாழக்காடு வரை ரூ. 6.32 கோடியிலும், போல்காடு பகுதியில் ரூ. 1.31 கோடியிலும், சித்தூா்நாடு ஊராட்சி, நெவரிக்காட்டில் ரூ. 1.30 கோடியிலும் தாா் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சேளூா்நாடு ஊராட்சியில் சோடாங்குழிப்பட்டி முதல் வீரகனூா்பட்டி வரை ரூ. 1.25 கோடியிலும், தேவனூா்நாடு ஊராட்சியில் மேட்டுவிளாரம் பகுதியில் ரூ. 3.78 கோடியிலும் என மொத்தம் ரூ. 14 கோடியே 32 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவா் மாதேஸ்வரி தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் சாலைப் பணிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் யுவராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கொங்கம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com