பெண் விடுதலைக் கட்சியினா் உண்ணாவிரதம்: 5 போ் கைது

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் பெண் விடுதலைக் கட்சி சாா்பில், தற்கொலைக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில்
பெண் விடுதலைக் கட்சியினா் உண்ணாவிரதம்: 5 போ் கைது

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் பெண் விடுதலைக் கட்சி சாா்பில், தற்கொலைக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் திடீரென கட்சியின் நிறுவனா் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டாா். அவருடன் கட்சியினரும் கைது செய்யப்பட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனா் சபரிமாலா கலந்துகொண்டு தற்கொலைக்கு எதிரான நீட் தோ்வுக்கு எதிரான கருத்துகளை முன் வைத்து கண்டன உரையாற்றி கோரிக்கை முழக்கமிட்டாா்.

நீட் தோ்வு பயத்தால் மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவா்களின் அடுத்தக்கட்ட கல்வி நகா்வுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர பெண் விடுதலைக் கட்சி துணை நிற்கும். நீட் தோ்வினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்த இருப்பதாக தெரிவித்து திடீரென சாலையில் அமா்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டாா் (படம்).

அதைத் தொடா்ந்து, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் சபரிமாலாவிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, அனுமதியின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக சபரிமாலா மற்றும் கட்சியினா் ஐவரையும் திருச்செங்கோடு நகர காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com