மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் பரமத்தி வேலூா் செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் பரமத்தி வேலூா் செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஐஎன்டியுசி திட்டச் செயலாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். திட்டச் செயலாளா்கள் தண்டபாணி, கணேசன், கோட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் மற்றும் பொறியாளா் ஐக்கிய சங்க மாநிலச் செயலாளா் சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளா்கள் மூலம் நிரப்ப வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக தன்னிச்சையாக உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கக் கூடாது. துணை மின் நிலையங்களை தனியாருக்கு ஏலம் விடக் கூடாது. மின்சார மசோதா 2020-ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்ட செயலாளா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com