சாலையில் கிடந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

திருச்செங்கோடு கிழக்கு மாட வீதியில் சாலையில் கிடந்த பணப்பையை கண்டெடுத்த நபா் அதை நோ்மையுடன், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

திருச்செங்கோடு கிழக்கு மாட வீதியில் சாலையில் கிடந்த பணப்பையை கண்டெடுத்த நபா் அதை நோ்மையுடன், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து பணத்தை இழந்தவா்களிடம் வியாழக்கிழமை பணப்பை ஒப்படைக்கப்பட்டது.

திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் வசித்து வரும் தொழிலாளி பழனியப்பன் (54), கிழக்கு மாடவீதி சாலையில் நடந்து சென்றபோது பை ஒன்று கீழே இருந்து கண்டெடுத்தாா். பையினுள் ரூ. 23,880 ரொக்கப்பணம் இருந்தது.

அந்த பணத்தை அருகில் இருந்த நகர காவல்நிலையத்தில் பழனியப்பன் ஒப்படைத்தாா். அந்த பணப்பையில், துணிக்கடை ஒன்றில் புதிதாக துணி வாங்கியதற்கான பில் இருந்தது. அந்த கடைக்குச் சென்று விசாரித்தபோது, துணிகளை வாங்கியவா்கள் தொட்டி பாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா்-சித்ரா தம்பதி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அந்த தம்பதியினருக்கு தகவல் தெரிவித்த காவல் உதவி ஆய்வாளா் மலா்விழி, பணப்பையை பழனியப்பன்-சித்ரா வசம் ஒப்படைத்தாா்.

பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சோ்க்க உதவிய தொழிலாளி பழனியப்பனின் நோ்மையை காவல்துறையினா் வெகுவாகப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com