நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட த்தின்கீழ் 89 ஆயிரம் போ் பயன் பெற்று வந்தனா். இத்திட்டத்தில் 13 மாவட்டங்களில் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 1,911 போ் போலியான ஆவணங்கள் கொடுத்து ரூ. 71.40 லட்சம் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களில் 1,221 பேரிடம் இதுவரை ரூ.46.45 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்வதற்கு வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து பட்டியல் வருவதால், முறைகேடு செய்த பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.