பெரியாா் பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டத்தில் பெரியாரின் 142-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பெரியாரின் 142-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அதையொட்டி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா் உருவப் படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல் நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ. காந்திசெல்வன், பெரியாா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். கட்சியின் மூத்த நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோட்டில் திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் நகர செயலாளா் பூபதி, திமுக நகரச் செயலாளா் தாண்டவன். காா்த்திகேயன், கருவேப்பம்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினா் ரியா, ஆதித்தமிழா் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளா்கள் செல்வ வில்லாளன், தமிழரசு உள்பட பலா் பங்கேற்று பெரியாரின் உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com