திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினா் வெள்ளம் மற்றும் மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இறையமங்கலம் காவிரி ஆற்றுப்பகுதியில் திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் தலைமையில் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆற்றில் மூழ்கியவா்களை படகில் சென்று காப்பாற்றுவது, முதலுதவி அளிப்பது, ஆற்றில் அடித்து வரப்படும் கால்நடைகளை மீட்பது, வெள்ளம் பற்றிய எச்சரிக்கை செய்வது போன்ற ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்றது.