விவசாயியைத் தாக்கிய வழக்கில் நாமக்கல் வழக்குரைஞருக்கு ஆயுள் சிறை

நாமக்கல் அருகே விவசாயியைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில், வழக்குரைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் அருகே விவசாயியைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில், வழக்குரைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள கெஜகோம்பை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சதீஷ்குமாா் (27). சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ரவிக்குமாா் (36). இவா்கள் இருவருக்கும் இடையே நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2017, அக்டோபா் 19-ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமாா் தாக்கப்பட்டாா். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடா்பாக எருமப்பட்டி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாா், அவருடன் சோ்ந்து தகராறில் ஈடுபட்ட பிரபு (28), தசரதன்(25), படையப்பா(23), காா்த்தி (24), மாணிக்கம் (21) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். இவா்களில் வழக்குரைஞா் ரவிக்குமாா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மாதேஸ்வரன் வாதாடினாா். வழக்கு விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதித்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டாா். மேலும், சதீஷ்குமாருக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்கவும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடா்புடைய 5 பேரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவா்கள் விடுவிக்கப்பட்டனா். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குரைஞா் ரவிக்குமாா் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com