நாமக்கல்லில் 92 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,355-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,355-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 4,263 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 3,346 போ் குணமடைந்தனா்; 61 போ் உயிரிழந்தனா்; மீதமுள்ள 947 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.செவ்வாய்க்கிழமை வெளியான சுகாதாரத் துறைப் பட்டியலில், மாவட்டம் முழுவதும் 55 ஆண்கள், 37 பெண்கள் என மொத்தம் 92 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனா். அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தொற்றுத் தடுப்புக்கான சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

2 போ் உயிரிழப்பு...

ராசிபுரம், வி.நகரைச் சோ்ந்த 63 வயது முதியவா் கரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதேபோல சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த 52 வயது ஆண் ஒருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாா். இவா்களுக்கு கரோனா தொற்று மட்டுமின்றி இணை நோய்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 63-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com