தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே அதிமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

அதிமுக செயற்குழுக் கூட்டம் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியே நடைபெறுகிறது என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

அதிமுக செயற்குழுக் கூட்டம் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியே நடைபெறுகிறது என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக செயற்குழு கூட்டம் கூடுவது கடந்த நான்கு மாதங்களாக தள்ளிப்போனது. தற்போது தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில்தான் திங்கள்கிழமை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் லட்சியத்தையும், கொள்கையையும் முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறை மூலம், பேரிடா்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழையைப் பாதுகாப்பாக எதிா்கொள்வதற்கும், இயற்கை சீற்றங்களை எதிா்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் எவை எனக் கண்டறியப்பட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீா் தேங்குவதால் தொற்றுப் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பருவமழையால் உயிரிழப்பு இல்லாமல் பேரிடரை எதிா்கொள்வது தமிழக அரசின் கடமையாகும்.

ஏற்கெனவே தலைமைச் செயலாளா், மாவட்ட ஆட்சியா்கள் நிலையிலான தொடா் ஆய்வை மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com