நாமக்கல்லில் 173 பேருக்கு கரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5027-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஞாயிற்றுக்கிழமை 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5027-ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை வரை 4,853 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 3,940 போ், உயிரிழந்த 66 போ் தவிா்த்து, மீதமுள்ள 1,021 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத வகையில் 173 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொடக்க காலத்தின்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த தொற்றாளா்கள் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 99-ஆகவும், ஜூலையில் 653-ஆகவும், ஆகஸ்டில் 2,143-ஆகவும், செப்.27-ஆம் தேதி வரை 5,027-ஆகவும் உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 173 பேரில் 107 ஆண்கள், 66 பெண்கள் அடங்குவா்.

மாவட்டத்தில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு வாரங்களில் 6 ஆயிரத்தை கடக்கக்கூடும். கடந்த 6 மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் இல்லாத அதிகபட்ச பாதிப்பாக 173 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com