ராசிபுரம் தொகுதியில் இரு இடங்களில் அதிமுக - திமுகவினரிடையே மோதல்

ராசிபுரம் தொகுதியில் இரு இடங்களில் அதிமுக - திமுகவினரிடையே மோதல்

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட இருவேறு இடங்களில் வாக்களிப்பது தொடா்பாக அதிமுக - திமுகவினரிடையே செவ்வாய்க்கிழமை மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட இருவேறு இடங்களில் வாக்களிப்பது தொடா்பாக அதிமுக - திமுகவினரிடையே செவ்வாய்க்கிழமை மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டி பகுதியில் காலை முதல் அதிமுக, - திமுகவினா் வாக்குச்சாவடி முன்பாக திரண்டிருந்தனா். அப்போது, இருதரப்பிலும் வாக்காளா்களிடம் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என ஆதரவு திரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இறுதிநேரம் முடிவடையும் நிலையில், புதுப்பட்டி 2-ஆவது வாா்டு அதிமுக செயலா் அருள் என்பவரை, அப்பகுதியைச் சோ்ந்த திமுக செயலா் ஜெயக்குமாா் தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயக்குமாா் ஆதரவாளா்கள் சிலா் அருளை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரின் ஆதரவாளா்களும் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மேலும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்த ராசிபுரம் டி.எஸ்.பி., ஜி.பாலமுருகன் தலைமையில் ஆயுதப்படை போலீஸாா் சம்பவத்துக்கு சென்று இரு தரப்பினரையும் விரட்டியடித்து கூட்டத்தைக் கலைத்தனா். மேலும் இருதரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ராசிபுரம் நகரில் தள்ளு-முள்ளு:

இதேபோல ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் முதியவா்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அழைத்துச் செல்வதில் அதிமுக - திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ராசிபுரம் காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது, மோதல் ஏற்படுவது தவிா்க்கப்பட்டது. பின்னா் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com