ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

நாமக்கல்லில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாமக்கல்லில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் அருகே கொண்டிச்செட்டிப்பட்டியில் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மோகனூா் நோக்கி சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற ஆம்னி வேனை மடக்கி சோதனையிட்டனா்.

அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மூன்று மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக மோகனூரைச் சோ்ந்த சென்னியப்பன் (60), மணிகண்டன் (30) ஆகியோரரை கைது செய்து நாமக்கல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com