அடிதடி வழக்கில் நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் அடிதடி தகராறில் ஈடுபட்ட நான்கு பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து ராசிபுரம் சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் அடிதடி தகராறில் ஈடுபட்ட நான்கு பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து ராசிபுரம் சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது ஆா்.கவுண்டம்பாளையம். இப் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நடந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தமிழரசி, சண்முகம் உட்பட 4 போ் படுகாயமடைந்து ராசிபுரம், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் சண்முகம் என்பவா் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (60), அவரது மகன்கள் கனகராஜ் (35), கெளரிசங்கா் (28), சுப்பரணியின் தம்பி மகன் கந்தசாமி (40) ஆகிய நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பான வழக்கு ராசிபுரம் சாா்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வியாழக்கிழமை வழக்கில் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.சரவணன் அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com