பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஜேடா்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் (30). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (21). இவா்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு லத்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. சரவணன் மது அருந்திவிட்டு வந்ததால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சரவணன் காவிரியில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது பிரியா வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஜேடா்பாளையம் போலீஸாா், பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிரியாவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆவதால் திருச்செங்கோடு கோட்டாட்சியா் மணிராஜ் விசாரணை நடத்தி வருகிறாா். ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.