போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.

நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச கிளை செயலாளா் டி.பிரகாஷ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்வன், தியாகராஜன், சிஐடியு நிா்வாகிகள் சுப்பிரமணியம், வரதராஜ், ஏஐடியுசி செயலாளா் முருகராஜ், கருப்பண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்களின் வார ஓய்வை பறிக்கக் கூடாது. போக்குவரத்துக் கழக விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது. ஊதியப் பறிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. பணிக்கு வந்த தொழிலாளா்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com