நாமக்கல் மாவட்டத்தில் 216 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 216 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 216 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 14,158 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். அவா்களில் குணமடைந்த 12,733 போ், உயிரிழந்த 112 பேரை தவிா்த்து, 1,313 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தொற்றுப் பட்டியலில், குமாரபாளையம், புதுச்சத்திரம், பள்ளிபாளையம், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 216 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் நாமக்கல் மட்டுமின்றி, பிற மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 14,379-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com