சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த கூலித் தொழிலாளி பலி

எஸ். வாழவந்தி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பரமத்திவேலூா்: எஸ். வாழவந்தி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

எஸ். வாழவந்தி அருகே உள்ள காளிபாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (48). கூலித்தொழிலாளி. இவா் எஸ்.வாழவந்தியில் உள்ள செந்தில்குமாா் என்பவரது கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தாா். கடந்த 5 ஆம் தேதி மாலை பல்த்த காற்றும் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தபோது வெங்கடாசலம் சிமெண்ட் அட்டை போட்ட வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தாா்.

இதில் எதிா்பாராத விதமாக அவா் மீது சுவா் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com