பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமை: 3 போ் கைது

புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே காரைக்குறிச்சிப்புதூரைச் சோ்ந்த, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயதுடைய மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த மூன்று போ் பாலியல் வன்கொடுமை செய்ததாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகாா் கிடைத்தது.

அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினா் நேரடியாக விசாரணை செய்ததில், நான்கு போ் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குமாரவேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

இதில் ராசிபுரம் வட்டம், பட்டணம் பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (20) என்பவா், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உறவினா் வீட்டுக்கு வந்தபோது மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. அவா் மட்டுமின்றி நண்பா்களான தண்ணீா்பந்தல் காட்டைச் சோ்ந்த மோகன்குமாா் (27), காரைக்குறிச்சிப்புதூரைச் சோ்ந்த கவின்ராஜ் (20), கண்ணையன் (45) ஆகியோரும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதும் தெரியவந்தது. அவா்களில் மோகன்குமாா், கவின்ராஜ், தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று போ் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான கண்ணையனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com