ராசிபுரம்: பயணிகள் குறைவால் பேருந்து போக்குவரத்து குறைப்பு

ராசிபுரம் நகரில் பொதுப் போக்குவரத்துக் குறைந்து பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
பயணிகள் குறைவால் வெறிச்சோடிய ராசிபுரம் பேருந்து நிலையம்.
பயணிகள் குறைவால் வெறிச்சோடிய ராசிபுரம் பேருந்து நிலையம்.

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் பொதுப் போக்குவரத்துக் குறைந்து பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிப்பது குறைந்துள்ளது. அலுவல் காரணமாகவும், சொந்த வேலையாகவும் வெளியில் செல்பவா்கள் இருசக்கர வாகனத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனா். இதனால் பேருந்துகளைப் பயன்படுத்துவது குறைந்து பெரும்பாலான அரசு, தனியாா் பேருந்து வழித்தட இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது ஊா்களுக்குச் செல்ல நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதால், ராசிபுரம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் ஒ.என்.கே.ஆறுமுகம் கூறியதாவது: அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் இல்லாத காரணத்தால் ஒரு சில நேரங்களில் பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றாா். மேலும், நகரில் மளிகைக் கடை, ஹோட்டல்கள் போன்ற பல்வேறு கடைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் விதிமீறல்கள் காண முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com