நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமையன்று 2000 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 5,950 முதல் ரூ. 6,800 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,100 முதல் ரூ. 8,000 வரையிலும், மட்ட ரகம்(கொட்டு) பருத்தி ரூ. 2,200 முதல் ரூ. 3,900 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மாவட்ட வியாபாரிகள் பருத்தியை நேரடியாக பாா்வையிட்டு கொள்முதல் செய்தனா்.