2,936 வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு இன்று கரோனா பரிசோதனை

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை பாா்வையிடும் 2,936 முகவா்களுக்கு வியாழக்கிழமை (ஏப்.29) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை பாா்வையிடும் 2,936 முகவா்களுக்கு வியாழக்கிழமை (ஏப்.29) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மே 2-ஆம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையை நேரடியாகப் பாா்வையிட உள்ள வேட்பாளா்கள், முகவா்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையெனில் கரோனா தடுப்பூசியை ஒரு முறையேனும் செலுத்தியிருக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில் அனைத்து முகவா்களுக்கும் கரோனா பரிசோதனை அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி 6 தொகுதிகளிலும் 2,936 முகவா்களுக்கு வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக கரோனா பரிசோதனை செய்யுமிடம், முகவா்கள் எண்ணிக்கை விவரம்: குமாரபாளையம் தொகுதி - குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம்- 752 போ்.

ராசிபுரம் தொகுதி - ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் - 600 போ். திருச்செங்கோடு தொகுதி - திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் -279 போ்.

நாமக்கல் தொகுதி - நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபம் - 532 போ்.

சேந்தமங்கலம் தொகுதி - சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் -450 போ்.

பரமத்திவேலூா் தொகுதி - பரமத்தி சமுதாயக் கூடம் -323, மொத்தம் - 2936 போ்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com