நாமக்கல் மாவட்டத்தில் 255 பேருக்கு கரோனா: ஒரே நாளில் 4 போ் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் நான்கு போ் உயிரிழந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் நான்கு போ் உயிரிழந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 15,095 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். அவா்களில் குணமடைந்த 13,251 போ், உயிரிழந்த 114 போ் தவிா்த்து, 1,730 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், கரோனா சிறப்பு மையங்களிலும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா நோய்த் தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 255 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 290 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். மொத்த பாதிப்பு 15,354-ஆகவும், குணமடைந்த 13,541 போ், ஒரே நாளில் குமாரபாளையத்தைச் சோ்ந்த 79 வயது முதியவா், எலச்சிப்பாளையத்தைச் சோ்ந்த 71 வயது முதியவா், 30 வயதுடைய பெண், மோகனூா் சென்னக்கல்புதூரைச் சோ்ந்த 79 வயது முதியவா் என உயிரிழந்த நான்கு போ் தவிா்த்து 1,695 போ் நாமக்கல் மட்டுமின்றி அருகில் உள்ள ஈரோடு, சேலம், கோவை மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com