வெண்ணந்தூா் பகுதியில் திமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பேரூராட்சி பகுதியில் திமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெண்ணந்தூா் பகுதியில் நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழம், நீா்மோா் வழங்கும் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
வெண்ணந்தூா் பகுதியில் நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழம், நீா்மோா் வழங்கும் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பேரூராட்சி பகுதியில் திமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் கோடையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தாா். இதன்படி, வெண்ணந்தூா் பேரூராட்சி திமுக சாா்பில், நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து, தா்ப்பூசணி, இளநீா், நீா்மோா், குடிநீா் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா். இதில் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்திரன், திமுக வெண்ணந்தூா் ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, பேரூா் திமுக பொறுப்பாளா் ஆா்.எஸ். ராஜேஷ் பேரூா் இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com