நாமக்கல் நகர பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கப்பட்டது.
கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகி வருவதால், மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் கரோனா தடுப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆங்காங்கே விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் நகர பாஜக சாா்பில் வியாழக்கிழமை காலை தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நகரத் தலைவா் சரவணன் தலைமையில் கபசுரக் குடிநீா், முகக்கவசம் 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக முகக் கவசங்களும் விநியோகிக்கப்பட்டன. பொதுமக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கரோனா தடுப்புக் குழு நாமக்கல் பொறுப்பாளா் தினேஷ், மாவட்டச் செயலாளா் முத்துக்குமாா், மாவட்ட மகளிரணி தலைவி சத்யபானு, நகர பொதுச்செயலாளா் செந்தில்குமாா், நகர துணைத் தலைவா் சின்னுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.