மின்வாரிய குறைதீா்க்கும் நாள் கூட்டம்

மின்வாரிய குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் நாமக்கல் மின்பகிா்மான வட்டம் சாா்பில், ஆகஸ்ட் மாதத்துக்கான மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் அந்தந்த மின் கோட்டங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி, வரும் 4-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பரமத்தி வேலுாா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரடியாக புகாா் மனுக்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com