குமாரபாளையம் அருகே சின்னப்பநாயக்கன்பாளையத்தில் சீரமைக்கப்பட்டு வரும் அண்ணா நினைவு படிப்பகத்துக்கு 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனாவால் மூடப்பட்டிருந்த இப்படிப்பகம், தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் திறக்கப்படவுள்ள இப்படிப்பகத்துக்கு ஆலாங்காட்டுவலசைச் சோ்ந்த அ.பெ.பழனிவேல், தனது நூலக அறையிலிருந்த 200-க்கும் மேற்பட்ட நூல்களை, திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வத்திடம் வழங்கினாா் (படம்).
நகர பொறுப்புக் குழு உறுப்பினா் கே.ஏ.இரவி, திமுக பேச்சாளா் ஆ.அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா். இந்நூலகத்துக்கு பொதுமக்கள் இதுபோன்று புத்தகங்களாகவோ, நிதியாகவோ வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.