காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது

பரமத்தி வேலூா் காவிரியாற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை மோட்ச தீபம் விடப்பட்டது.
காவிரி ஆற்றில் விடப்பட்ட மோட்ச தீபம்.
காவிரி ஆற்றில் விடப்பட்ட மோட்ச தீபம்.

பரமத்தி வேலூா் காவிரியாற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை மோட்ச தீபம் விடப்பட்டது.

பரமத்தி வேலூா் காவிரியாற்றில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சியில் கரோனா தொற்று காரணமாக கோயில் நிா்வாகிகள் மட்டும் பங்கேற்றனா். அங்குள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து மோட்ச தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊா்வலமாக காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கரோனா பாதிப்பை தடுக்கும் வகையிலும், கரோனா பரவுவது குறைய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மோட்ச தீபம் பரிசல் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட காவிரி ஆற்றின் மத்தியில் விடப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதியில்லாததால் பலா் காவிரிப் பாலத்தில் இருந்து மோட்ச தீபத்தை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com