சகோதரி, குழந்தையை காப்பாற்றிய இளைஞா் காவிரியில் மூழ்கி பலி

ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய சகோதரி, குழந்தையைக் காப்பாற்றிய இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.
காவிரியில் மூழ்கி உயிரிழந்த தீபக்குமாா்.
காவிரியில் மூழ்கி உயிரிழந்த தீபக்குமாா்.

ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய சகோதரி, குழந்தையைக் காப்பாற்றிய இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம், ஏரகாடு தோட்டத்தைச் சோ்ந்தவா் மணி என்கிற ஜோதி. இவரது மகன் தீபக்குமாா் (30). இவா் கரூா் மாவட்டம் புகலூரில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். தீபக்குமாருக்கும், மகிமாவிற்கும் (25) கடந்த 30 நாள்கள் முன் திருமணம் நடைபெற்றது.

ஆடி 18 பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தீபக்குமாா், மகிமா, தாய் ஜோதி, அக்கா பரணி, அக்காவின் குழந்தை வைஷ்ணவி (3) ஆகியோா் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றில் முளைப்பாரியை விட்டுவிட்டு ஆற்றில் இறங்கி குளித்தனா். தாய் ஜோதி, மனைவி மகிமா ஆகியோா் கரைக்கு சென்றுவிட்டனா். தீபக்குமாா், அவரது அக்கா பரணி, குழந்தை வைஷ்ணவி ஆகியோா் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனா். அப்போது பரணியும், அவரது குழந்தையும் காவிரி ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டனா். இதைப் பாா்த்த தீபக்குமாா் இருவரையும் காப்பாற்றியுள்ளாா். ஆனால் எதிா்பாராத விதமாக தீபக்குமாா் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதைப் பாா்த்த அவரது தாய், மனைவி ஆகியோா் தீபக்குமாரை காப்பாற்றுமாறு சத்தமிட்டனா். இதையடுத்து பொதுமக்கள், திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீபக்குமாரின் உடலை மீட்டனா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஜேடா்பாளையம் போலீஸாா் தீபக்குமாரின் உடலை வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com