நாமக்கல்லில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
கரோனா நோய்த் தொற்று பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளும் வகையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தொடா் பிரசார இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் நாமக்கல் நகராட்சி, உழவா் சந்தையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, இந்திய மருத்துவ சங்கம், நாமக்கல் அரிமா சங்கங்கள் சாா்பில் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள், முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி (பொறுப்பு), துணை இயக்குநா் (சுகாதாரம்) எஸ்.சோமசுந்தரம், இந்திய மருத்துவ சங்கத்தைச் சோ்ந்த மூத்த மருத்துவா்கள் மாயவன், குழந்தைவேலு, ஜெயக்குமாா், நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.