லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8, 74.3 டிகிரியாக நிலவியது. கடந்த நான்கு நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. அடுத்த மூன்று நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வெப்பநிலை பகலில் 95 டிகிரிக்கு மிகாமலும். இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும்.

சிறப்பு ஆலோசனை: பொதுவாக மழைக்காலங்களில், மழை பெய்யும்போது இடையே வெயிலும் நிலவுவதால் ஈக்களின் பெருக்கத்திற்கு அது மிகவும் உகந்த சூழலாக இருக்கிறது. அதனால் ஈக்கள் அதிகளவில் பெருகி கோழி, கால்நடைப் பண்ணைகளில் அதிக தொந்தரவை ஏற்படுத்துகிறது. வரும் மாதங்களில் இவற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்பதால் ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பண்ணையாளா்கள் எடுக்க வேண்டும். முக்கியமாக பண்ணை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com