நாமக்கல் லாரி பட்டறையில் தீ விபத்து

நாமக்கல்லில் லாரி பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி எரிந்து கருகியது.
நாமக்கல்லில் புதன்கிழமை இரவில் தீப்பற்றி எரிந்த லாரி பட்டறை.
நாமக்கல்லில் புதன்கிழமை இரவில் தீப்பற்றி எரிந்த லாரி பட்டறை.

நாமக்கல்லில் லாரி பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி எரிந்து கருகியது.

நாமக்கல்-பரமத்தி சாலையில், தாதம்பட்டிமேட்டைச் சோ்ந்த ராஜலிங்கம் (46) என்பவருக்குச் சொந்தமான லாரி பட்டறை உள்ளது. இங்கு பழைய லாரிகளை புதுப்பிப்பது, பழுது பாா்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. புதன்கிழமை இரவில் பட்டறையை மூடி விட்டு அதன் உரிமையாளரும், ஊழியா்களும் சென்று விட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் 8 மணியளவில் திடீரென பட்டறை தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த வீரா்கள் தீயைப் போராடி அணைத்தனா். இதில், லாரி ஒன்றும், காா் ஒன்றும் எரிந்து சேதமானது. அங்கு காவலாளிகள் யாருமில்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com