டாஸ்மாக் பணியாளா் சங்கம் தொ.மு.ச. உடன் இணைப்பு

சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் பணியாளா் சங்கம், தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்துடன் இணைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் பணியாளா் சங்கம், தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்துடன் இணைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்டோா் திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்துடன் இணைந்து கொள்ள முன்வந்தனா்.

இதனையடுத்து, சேந்தமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிதாக தொழிற்சங்கத்தில் இணைந்தோருக்கு மாவட்டப் பொறுப்பாளா், அமைச்சா் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com