திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அடையாள அட்டைகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நாமக்கல்லில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங். உடன், எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
நாமக்கல்லில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங். உடன், எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.

நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அடையாள அட்டைகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நாமக்கல், திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்று 43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மின்னணு வாக்காளா் அட்டை ஆகியவற்றை வழங்கினாா். மேலும், அரசு தோ்வுக்கு தயாராகும் திருநங்கைகளின் தேவையைக் கேட்டறிந்து, அவா்களுக்கான உதவியை செய்து கொடுப்பதாக உறுதியளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மரக்கன்றுகளை நட்டாா். இந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் கோட்டைகுமாா், சமூக நல அலுவலா் கீதா, நாமக்கல் வட்டாட்சியா் திருமுருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி, தலைமை ஆசிரியை பாா்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com