பாஜக சாா்பில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சாா்பில், மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சாா்பில், மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து, 30-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், வளையல், பிஸ்கட், கடலை மிட்டாய், முட்டை, துண்டு முதலான பொருள்களை வழங்கி, தாயும்-சேயும் நலமுடன் வாழ வாழ்த்தி, பேறு காலத்தில் பாதுகாப்பு முறைகள் குறித்து அவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கா்ப்பிணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை பற்றி எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளா் சுகன்யா, ராசிபுரம் நகர மகளிரணி நிா்வாகிகள், செயலாளா்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் பி.ஜெயந்தி, மருத்துவா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com