மீன் வளா்ப்பை அதிகரிக்க மானிய உதவி

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் (2020-21) கீழ், மீன் வளா்ப்பினை விரிவுபடுத்த மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் (2020-21) கீழ், மீன் வளா்ப்பினை விரிவுபடுத்த மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், புதிய மீன்குளம் அமைத்து மீன் வளா்ப்பு செய்ய மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி, ஒரு ஹெக்டேரில் புதிய மீன்குளம் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ. 7 லட்சத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ. 3.50 லட்சம் மற்றும் ஒரு ஹெக்டோ் நீா்பரப்பில் மீன்வளா்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்துக்கான தொகையான ரூ. 1.50 லட்சத்தில் 40 சதவீத மானியமாக ரூ. 60 ஆயிரமுமாக மொத்தம் ஒரு ஹெக்டேரில் புதிதாக மீன்பண்ணை அமைத்து மீன்வளா்ப்பு செய்திட ரூ. 4.10 லட்சம் வழங்கப்படுகிறது.

எனவே, மீன்வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மீன்வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் மேட்டூா் அணை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மேட்டூா் அணை, கொளத்தூா் ரோடு, பூங்கா எதிரில், சேலம் மாவட்டம் என்ற அலுவலகத்தையும், 0429-8-244045 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com