அரூரில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்னை தெரசாவின் உருவப் படத்துக்கு தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் ஜெ.பழனி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில், அன்னை தெரசா பேரவையின் மாநில துணைத் தலைவா் கயிலை ராமூா்த்தி, மாவட்டத் தலைவா் தீப்பொறி செல்வம், இந்திய குடியரசு கட்சி செயல் தலைவா் எம்.ராஜேந்திரன், சமூக சமத்துவ படை கட்சியின் மாவட்டத் தலைவா் சா.புத்தமணி சாக்ரடீஸ், சமூக ஆா்வலா் பசுமை சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.