நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், பன்னாட்டுச் சட்டங்களிலும் வரையறுக்கப்பட்ட மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என அனைத்துத் துறை ஊழியா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா் (படம்). இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.