நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் டிச. 19-இல் அபிஷேக முன்பதிவு தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் 2022-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு வரும் 19-இல் தொடங்குகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் 2022-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு வரும் 19-இல் தொடங்குகிறது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில் வடை மாலை சாத்துதல், பாலாபிஷேகம் கட்டளைதாரா்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பரவலால் ஓராண்டாக அபிஷேகத்துக்கான முன்பதிவு நடைபெறவில்லை.

இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேக முன்பதிவு வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முழுத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆஞ்சநேயா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com