பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்த விலைக்கு ஏலம்போனது.
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
ஏலத்துக்கு பரமத்திவேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய்களை கொண்டுவருகின்றனா். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5,036 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 30-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 20-க்கும், சராசரியாக ரூ. 27.50-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 204-க்கு வா்த்தகம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 30-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 19-க்கும், சராசரியாக ரூ. 25-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 33,853-க்கு வா்த்தகம் நடைபெற்றது.