நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ரூ. 9 லட்சத்துக்கு விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

ஏலத்துக்கு விரலி ரகம் 150 மூட்டை, உருண்டை ரகம் 70 மூட்டை, பனங்காளி ரகம் 2 மூட்டை என மொத்தம் 222 மூட்டைகள் கொண்டுவரப்ட்டிருந்தன. ஏலத்தில் விரலி குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 6,169 முதல் அதிகபட்சமாக ரூ. 9,532 வரை விலைபோனது.

அதுபோல உருண்டை குவிண்டால் ரூ. 6,009 முதல் அதிகபட்சமாக ரூ. 7,669 வரை விலைபோனது. பனங்காளி ரூ. 4,212 முதல் ரூ. 16,345 வரை விலை போனது. இதில் மொத்தம் ரூ. 9 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com